Saturday 18 May 2013

இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்


இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்

சமயங்களில் நம்மில் பலருக்கும், சில கேள்விகள் எழலாம். எனக்கு தோன்றிய சில எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். உங்களுக்கு அவற்றுள் சில உபயோகப்படலாம்.

சின்ன வயசுல இருந்தே , என்னோட நட்பு வட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லா சேட்டையும் செய்வோம். அதே நேரம், ஒரு குழுவா திரட்டி கோவில் குளம் சுத்தம் செய்யறது, மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் போய் அங்கு பஜன் பாடுறது, அவங்க கிட்ட ஆதரவா பேசுறது மாதிரி கொஞ்சம் நல்ல காரியமும் செய்வோம். வித்தியாசமா சிந்திக்கவும் செய்வோம். அந்த குழுவில் மூன்று நல்ல , நெருங்கிய நண்பர்கள் எனக்கு உண்டு - இருபது வருடங்களை கடந்தும் ஆழமாக வேர் விட்டு ஓடும் நட்பு அது. பேர் ராசியோ , என்னவோ - ஆரம்பத்தில இருந்தே நம்மளை குரு ஸ்தானத்துல வைச்சிட்டாங்க. 


இன்று பார்க்க விருப்பவை , என் நட்பு வட்டாரத்தில் இருந்து என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகள். பகுத்தறிவு சிந்தனை தூண்டுவது போல இருந்தாலும், வெட்டிப் பேச்சாக இல்லாமல் , விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகள் ஆதலால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை , அவர்களுக்கு நான் பதில் கூறி இருக்கிறேன்.

நம் வாசகர்கள் பலருக்கும் இதைப் போன்ற சிந்தனைகள் எழுந்து இருக்கக் கூடும். நான் ஒரு கத்துக் குட்டி. உங்களில் சிலருக்கு இன்னும் தெளிவான சிந்தனைகள் எழலாம். இந்த கட்டுரை படிக்கும் ஒவ்வொருவரும், சிரமம் பார்க்காது - உங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் , நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.நமது வாசகர்களுக்கும் பயன் கிடைக்கும். சரி, இனி சப்ஜெக்ட்க்கு வருவோம்..

No comments:

Post a Comment